Thursday 2nd of May 2024 06:01:16 PM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாருக்கு மஞ்சள் கடத்தல்! ஐவர் கைது!

யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாருக்கு மஞ்சள் கடத்தல்! ஐவர் கைது!


யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாருக்கு கடத்தி வரப்பட்ட 1989 கிலோ கிராம் மஞ்சள் கட்டி மூடைகளுடன் மன்னாரைச் சேர்ந்த 5 நபர்களை இன்று (14) புதன் கிழமை(14) காலை 7.55 மணியளவில் மூன்றாம் பிட்டி பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு மஞ்சள் கட்டி மூடைகள் கடத்தப்படுவதாக இலுப்பைக்கடவைப் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் விரைந்து செயல் பட்ட இலுப்பைக்கடவை பொலிஸார் மூன்றாம் பிட்டி பகுதியில் வைத்து இன்று புதன் கிழமை(14) காலை வாகனம் ஒன்றில் கடத்தி வரப்பட்ட குறித்த மஞ்சள் கட்டி மூடைகளை கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட மஞ்சள் கட்டி மூடைகள் 1989 கிலோ கிராம் நிறை கொண்டதோடு, குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட மன்னாரை சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மஞ்சள் கட்டி மூடைகள்,மற்றும் வாகனம் என்பன இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்ட குறித்த 5 நபர்களும் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் மீட்கப்பட்ட மஞ்சல் கட்டி மூடைகள் மற்றும் வாகனம் என்பன மன்னார் நீதிமன்றத்தில் ஓப்படைக்கப்பட உள்ளதோடு, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 5 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE